15 பிப்ரவரி 2011

யாழில் படையினர் அரங்கேற்றும் நாடகங்கள்!

யாழ் குடாவில் இராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் மின் கம்பங்களிலிலும் தொங்கவிடப்பட்டுள்ளது.
குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை, கடத்தற் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் சோதனைகள் மற்றும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான செயல்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புத் தரவேண்டுமென அந்த துண்டுப் பிரசுரங்களிலும் சுவரொட்டிகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுவரொட்டிகள் இரவோடிரவாகவே ஒட்டப்பட்டுள்ளதுடன் அது யாரால் வெளியிடப்பட்டது என குறிப்பிடப்படவில்லை.
இதேவேளை குடாநாட்டு மக்களிடம் நன்மதிப்பைப் பெறுவதற்காக திருமண வைபவம், மரணச் சடங்குகள் போன்றவற்றிற்கு உயர் அதிகாரிகள் சகிதம்வந்து அனுதாபங்கள், வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதுடன் இளைஞர்களுடனான விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக