20 பிப்ரவரி 2011

அன்னையின் இறுதி நிகழ்வை இன்றே நடத்துமாறு படை அச்சுறுத்துகிறது!

தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று 2 மணியிலிருந்து 4 மணிவரைக்கும் வல்வெட்டித்துறை ஊரணி(தீருவில்) பொது மயானத்தில் நடைபெறும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஈழதேசம் இணையத்திடம் சற்று முன் தெரிவித்திருந்த நிலையில் அங்கு வந்த ராணுவத்தினர் தேசத்தின் அன்னையின் உடலை இன்றே தகனம் செய்யவேண்டும் என்று எச்சரிப்பதாக எமது விசேட செய்தியாளர் சற்று முன் எமக்கு தெரிவித்துள்ளார் என ஈழ தேசம் இணையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வரை தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ராணுவத்தினர் திட்டமிட்டு இவ்வாறு எச்சரிக்கைகளை விடுத்துவருவதாக தெரியவருகிறது.
வல்வெட்டித்துறை உட்பட தமிழீழமே இன்று ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளதோடு ராணுவத்தினரின் கெடுபிடிகளை பொறுட்படுத்தாமல் மக்கள் அலையலையாக சென்று தேசத்தின் அன்னைக்கு கண்ணிர் அஞ்சலியை செலித்திவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக