06 பிப்ரவரி 2011

புலிகளுக்கு நிதி சேர்த்தார்களாம்!இரு இளைஞர்கள் கைது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கொழும்பில் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்கிற சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இருவரும் ஹெட்டியாவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களின் உடைமையில் இருந்து தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், 188240 ரூபாய் பெறுமதி உடைய ரொக்கப்பணம் ஆகியன கைப்பற்றப்பட்டு உள்ளன.
இவர்கள் கொழும்பில் வர்த்தக பிரமுகர்களிடம் இருந்து புலிகள் இயக்கத்துக்காக இவற்றை எல்லாம் கப்பமாக பெற்று இருந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அற்வித்து உள்ளது.
இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜராக்கப்பட உள்ளார்கள் என்றும் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் முடுக்கி விடப்பட்டு உள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக