18 பிப்ரவரி 2011

யாழில் வெடிபொருட்களுடன் பார ஊர்தி!

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் பார ஊர்தியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசார் இன்று அறிவித்துள்ளனர்.பொலிசாரால் கைப்பற்றப்பட்ட பிரஸ்தாப பார ஊர்தியில் ஜெலிக்நைட் குச்சிகள் 115ம் டெட்டனேட்டர்கள் 90ம் இன்னும் பல வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்களிலிருந்து மேலும் தெரிய வருகின்றது.
வெடிபொருட்களை எடுத்துக் கொண்டு பார ஊர்தியொன்று பயணிப்பதாகக் கிடைத்த தகவலொன்றையடுத்தே பொலிசார் அதனைச் சோதனையிட்டுக் கைப்பற்றியுள்ளனர்.
பார ஊர்தி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதன் சாரதி மற்றும் உரிமையாளர் ஆகியோரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக