28 பிப்ரவரி 2019

அபிநந்தனை வரவேற்க புறப்பட்டார் தந்தை!

Image result for apinanthanஇந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை அடுத்து சென்னையில் அவர் வீடு உள்ள பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.
அந்த பகுதி மக்கள் இனிப்பு வழங்கி அபிநந்தன் விடுதலையாவதை கொண்டாடினர்.
விடுதலை செய்தி மகிழ்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர்.இந்த சூழலில் அபிநந்தனை வரவேறக் அவரது தந்தை சிம்மக்குட்டி வர்தமான் டெல்லி புறப்பட்டார்.
செய்தியாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார்.
அந்தப் பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.முன்னதாக பல அரசியல் கட்சி தலைவர்கள், காவல் படை அதிகாரிகள் அபிநந்தனின் தந்தயை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.
இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்றார்.
இதனை அடுத்து இன்று மாலை பத்தரிகையாளர்களை முப்படை தளபதிகள் சந்தித்தனர்.
வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதை அவர்கள் தவிர்த்தனர்.

நன்றி:பிபிசி தமிழ்