
அவரைப் பார்த்து இலங்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவே நீங்கள் இதுபோல ஆவணப்படங்களை வெளியிடுகிறீர்கள் என்று திருமதி ராஜேஸ்வரி சாடினார். கேடுகெட்ட பிரபாகரனால் தான் எமது பிள்ளைகள் பலர் இறந்தனர் என எமது தேசிய தலைவரை அவமதித்து மிகவும் தரைக்குறைவாக அவர் பேசினார். உடனே சிங்களவர்கள் அதனை கைதட்டி ஆராவாரப்படுத்தினர். தொடர்ந்து அவர்பேச சுமார் 7 நிமிடங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் இனிவேண்டாம், தமிழர்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று சனல் 4 டரைக்டரைப் பார்த்து அவர் உரக்கக் கத்தினார்.
தான் ஏதோ பிரித்தானியாவில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக ஒலிப்பதாக அவர் பேச்சு அமைந்திருந்தது. இவர் இலங்கை அரசின் கைக்கூலி என்பது பலருக்கும் தெரிந்த விடையம். சமீபத்தில் தீபம் தொலைக்காட்சிக்கு இவர் ஒரு பேட்டிகொடுக்கப்போய், இலங்கை அரசைப் பற்றி நல்லமாதிரிக் கதைத்து பொதுமக்களிடம் தொலைபேசிவாயிலாக வாங்கிக்கட்டியது சிலருக்கு ஞாபகம் இருக்கும். அந் நிகழ்ச்சியின் முடிவில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சபா நாவலன் மீது மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினார் திருமதி ராஜேஸ்வரி. பின்னர் படுகெட்ட வார்த்தைகளாலும் அவர் சபா நவலனைத் திட்டித் தீர்த்தார் என்பது நிகழ்ச்சிக்குப் பின் நடந்த வெளிவராத நிகழ்வு.
இவரைப் போன்ற இலங்கை அரசின் அடிவருடிகளை சமுதாயத்தில் முன்னணியில் உள்ளோர் ஏன் தமது கூட்டங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பேசினால் கூடப் பரவாயில்லை அவர் அதற்கு எதிரானவர் என்று சொல்லாம். ஆனால் தமிழர்கள் பிழைவிட்டுவிட்டார்கள் என்றுகூற இவர் யார் ? மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக