19 அக்டோபர் 2011

சாந்தன்,முருகன்,பேரறிவாளன் தூக்கு தொடர்பான இன்றைய வழக்கிலும் ராம் ஜெத்மலானி ஆஜரானார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சி.கே. பிரசாத், டத்து ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். இந்த விசாரணை விசயமாகத்தான், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக