11 அக்டோபர் 2011

தமிழினிக்கு மீண்டும் தடுப்புக் காவல் உத்தரவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணித் தலைவியான தமிழினியின் தடுப்புக்காவல் இம்மாதம் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழினி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகள் குறித்தும் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளாதாகவும் ஆனால் இதுவரை பதில் கிடைகக்வில்லைஎன குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்துக்குத் தெரிவித்ததனையடுத்தே இந்தத் தடுப்பக் காவல் நீடிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக