03 அக்டோபர் 2011

மின்னேரியா வதை முகாமில் புலிகளின் தளபதிகளுக்கு சித்திரவதை!

இலங்கை இராணுவத்தால் கைது செய்ய பட்ட முன்னாள் புலிகளின் முக்கிய தளபதிகள் ஒன்பது பேர் மின்னேரியா இராணுவ முகாம் அருகில் அமைக்க பட்டுள்ள புதிய வதை கூடம் ஒன்றில் வைத்து வைத்து கோரமானசித்திர வதைகளிற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக முக்கிய இராணுவ தளபதி ஒருவர் வாயிலாக செய்திகள் கசிந்துள்ளன .
அவ்வாறு வதைக்கபடும் முக்கிய போராளி தளபதிகளின் பெயர் விபரங்கள் சில வட்டாரங்களிற்கு வழங்கபட்டுள்ளன .எதிர் வரும் காலங்களில் இவர்களின் பெயர் விபரங்கள் மகிந்தா சகோதர்களின் போர் குற்ற மனித உரிமை மீறல்களிற்கு பெரும் சான்றாக அமையும் என பரபரப்பாக பேசபடுகின்றது .
நிகங்கள் பிடுங்கபட்டு கண் இமைகள் கிழிக்கபட்டு கை,கால் எலும்புகள் பலமாக பாதிக்கபட்ட நிலையில் இவர்கள் உள்ளதாகவும் தமது சுய நினைவை இழக்கும் படியான அவை மெல்ல மெல்ல செத்து செயலற்று போகும்படியான ஊசிகள் ஏற்றபட்டு இவர்கள் வதைக்கபட்டு வருவதாக அந்த வட்டாரங்களிற்கு தகவல்கள் கிடைக்கக் பெற்றுள்ளன.
மிக விரைவில் இவை ஆதாரபூர்வமாக சில ஆவணங்கள் வாயிலாக கிடைக்க பெறும் போது இலங்கை அரசானது உலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து பெரும் எதிர்ப்பினை சந்திக்க வேண்டி வரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக