21 அக்டோபர் 2011

ஸ்ரீலங்கா அரசு மீது தருஸ்மான் குற்றச்சாட்டு!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு ஐநா செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு என அக்குழுவின் தலைவர் மர்சுக்கி தருஸ்மான் தெரிவித்துள்ளார்.
ஆனால் நிபுணர் குழுவை இலங்கை அரசாங்கம் தருஸுமான் குழு என அழைப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐநா செயலாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நியமிக்கப்பட்டதால் அதனை நிபுணர் குழு என்றே அழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள மர்சுக்கி தருஸுமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐநா நிபுணர் குழு அறிக்கையை இலங்கை தருஸுமன் அறிக்கை என்றே அழைத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக