
இவர்கள் இருவரும், இணைந்து விருந்தில் நடனமாடினர். கருணா தனது பரிவாரங்களுடன் இரவு 10 மணியளவில் விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தார். இவர் விருந்துக்கு வந்ததை பார்த்த முழு இராணுவ அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.அங்கு முன்னாள் இராணுவ தளபதிகளான ஸ்ரீலால் விஜேசூரிய, ஜெனரல் ரொஹான் தளுவத்த, ஜெனரல் ஜெரி சில்வா, பாதுகாப்பு செயலாளரான முன்னாள் இராணுவ கர்ணல் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமே சிவில் உடையில் காணப்பட்டனர்.
30 வருடகால யுத்தத்தில், இராணுவத்தினருடன் நடந்த பயங்கரமான மோதல்களின் போது, எதிரணியில் இருந்த ஆயுதப்படையினருக்கு கட்டளைகளை வழங்கிய கருணா, இராணுவத்தினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த விருந்து உபசாரத்தில் எப்படி கலந்துக்கொள்ள முடியும் என இராணுவத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்து கேள்வி எழுப்பிக்கொண்டனர்.
இதன் காரணமாக இராணுவ தளபதியும் விசனமடைந்துள்ளார்.விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த மேஜர் ஜெனரலான மிலிந்த பீரிஸை அழைத்து, யார் கருணாவுக்கு அழைப்பு விடுத்தது என இராணுவத் தளபதி வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த பீரிஸ், தான் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். கருணா மூலம் எதிர்காலத்தில் பல வேலைகளை செய்துக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்புச் செயலாளர், "இல்லை.. இல்லை.. பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நான் தான் அவரை வர சென்னோன்" என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கருணா தரப்பினர் இராணுவ அதிகாரிகள் இருக்கும் இடத்திற்கு சென்ற போது, இராணுவத் தளபதி, தனது வெட்கத்தை கதிரை மீது வைத்து விட்டு, கருணாவுக்கு மரியாதை செலுத்தினார். விடுதலைப்புலிகளின் ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் கருணாவை, இராணுவத் தளபதி சேர் என அழைத்ததுடன் பிரதியமைச்சரான கருணா, அரசாங்க அதிகாரியான பாதுகாப்புச் செயலாளரை சேர் என விளித்தார்.
இவர்களை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளும், கருணா முன்னிலையில், மரியாதை செலுத்தும் வகையில் காணப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர், கோத்தபாய ராஜபக்ஷ தனது மனைவியுடன் நடனமாடினார். அவரது மனைவி சென்றவுடன் அவர் கருணாவுடன் இணைந்து குத்தாட்டம் ஆடத்துவங்கினார்.
இதனை பார்த்து பொறுத்து கொள்ள முடியாத முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர், சொல்லிக் கொள்ளாமல். விருந்து நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக