
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபப்ட்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு போர்க்குற்றவாளியூடாகவே தமிழர்களின் இலக்கங்கள் பரிமாறப்பட்டுள்ளன.
2010 காலப்பகுதியில் 235 வரையான தொலைபேசி இலக்கங்கள் உட்பட்ட விபரங்கள் ஜெகத் டயஸ் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது என சுசிஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. சுவிசில் இருந்து தாயகத்தில் இவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார்கள். புலி ஆதரவாளர்கள் என நம்பப்பட்டு இவர்கள் கடத்தல், கப்பம், கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் சட்டத்தரணி மாக்ஸ் கூறுகையில் இது ஒரு சட்டவிரோத நடவடிக்கை என கூறியுள்ளார். மேலும் பீதிக்குள்ளாகும் சமூகங்களை காக்கும் அமைப்பின் இணைப்பாளர் அஞ்சலா மற்றி இது பற்றி கூறுகையில் சிறிலங்காவில் விடுதலைப்புலி ஆதரவாளர்களை கொல்வதற்கு இந்த செயல் பயன்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக