03 அக்டோபர் 2011

ஐயாயிரம்பேர் கையெழுத்திட்டால் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை!

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை வெள்ளை மாளிகையிடம் கையளித்த மனு தொடர்பில், ஐயாயிரம் பேரின் கையயாப்பத்துடன் குறித்த மனு கையளிக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இலங்கையில் படையினர் மேற்கொண்ட போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்திவரும் சர்வதேச மன்னிப்புச் சபை, போர்க் குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையில் மனுவொன்றைக் கையளித்துள்ளது.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாக வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், எதிர்வரும் 29-ம் திகதிக்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை அடங்கிய மனுவை,ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் அனுப்பி வைத்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தது. இது இவ்வாறிருக்க இவ்வறிவித்தல் வெளியான கையோடு இணையத்தளம் மூலமாக சுமார் மூவாயிரம் பேர் தங்கள் சம்மதத்தை தெரிவித்து தகவல் அனுப்பியுளளனர். இதேவேளை இது இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தின் முதற்கட்ட நடவடிக்கை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக