09 ஜனவரி 2011

யாழில் கைது செய்யப்பட்டவர் ஈ,பி,டி,பி,உறுப்பினர்தான்,கத்துரு சிங்க உறுதி.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட ஜீவன் என்பவர் ஈபீடீப்பி உறுப்பினரே என யாழ் கட்டளைத் தளபதி ஹத்துரசிங்க தெரிவித்துள்ளார். இதனை யாழ் பிராந்தியத்திற்கு பொறுப்பான காவற்துறை அதிகாரி நெவில் பத்ம தேவவும் உறுதிப்படுத்தி உள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தான் வவுனியா, ஊர்காவற்துறை, யாழ்பப்பாணம் என முன்னுக்கு பின் முரணாக தகவல்களைக் கூறுவதாக தெரிவித்துள்ள படைத்தரப்பினர் இவருக்கு 4 மனைவிகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். போலி அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்த சமயம் கைது செய்யப்பட்ட இவரிடம் கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜீவன் என்ற இந்த நபர் ஈபீடீபீயின் அடையாள அட்டையை வைத்திருப்பதுடன், ஆவணங்கள் சிலவற்றையும் வைத்திருப்பதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.ஆனாலும் ஈ,பி,டி,பி,இவர் தமது உறுப்பினர் இல்லை என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக