27 ஜனவரி 2011

கிளிநொச்சியில் இளம் பெண்ணை காணவில்லையென தகவல்!

கிளிநொச்சியில் நேற்று முதல் இளம்பெண்ணொருவர் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பலராலும் முன் வைக்கப்பட்டுள்ளது.
காணாமற்போயுள்ள பெண் கிளிநொச்சியின் நாச்சிக்குடா பிரதேசத்தைச் சோ்ந்தவர் என்று தெரிய வந்துள்ளதுடன், அவர் ஒரு குழந்தையின் தாய் என்றும் தெரிய வருகின்றது.
தனது உறவினர் ஒருவரின் புதுமனை புகும் விழாவிற்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வேளையிலேயே அவர் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. அது பற்றி உறவினர்களால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமற் போயுள்ள பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதுடன், அவர் தன் சகோதரி வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் சிறுவனொருவனைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களின் உதவியால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக