07 ஜனவரி 2011

திருமலை காட்டில் தலைவரின் படத்துடன் கலண்டர் கண்டுபிடிப்பென தகவல்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படம் அடங்கிய கலண்டர் ஒன்றை திருகோணமலை பொலிஸார் திருமலை, உப்புவெளி பிரதேச கன்னியா வெந்நீர் ஊற்று காட்டுப் பகுதியிலிருந்து மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
திருமலை பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனையின் போதே தலைவர் அவர்களின் புகைப்படம் அடங்கிய கலண்டர் உட்பட ரீ 56 ரக தன்னியக்க துப்பாக்கி ஒன்று, கைக்குண்டொன்று, ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 116, மகஸின் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
திருமலை காட்டுப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக