24 ஜனவரி 2011

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் மகிந்த!

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டனில் மருத்துவமனையொன்றில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹுஸ்டன் நகரில் எம்.டீ. அண்டர்சன் கென்சர் சென்டர் எனும் மருத்துவமனையிலேயெ அவர் சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் உடம்பின் கீழ்ப்பாகத்திலேயே நோய் தோன்றியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான சிகிச்சையை இலங்கையில் பெற்றுக் கொண்டிருந்த போதிலும் குணமாகாத நிலையிலேயே அவர் தற்போது அமெரிக்காவுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தின் இணைந்த மருத்துவமனையிலேயே அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு குணமடைய வேண்டி ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆயிரம் சுமங்கலிகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
ஜனாதிபதியின் சுகவீனம் பாரியளவிலானதாக இல்லாதபோதிலும், எதிர்வரும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவரால் பங்கெடுக்க முடியுமா என்பது சந்தேகம் என்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.

இலங்கை ஜனாதிபதி ஆபத்தான நோய்காகவே அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் - ஸ்ரீலங்கன் காடியன்

இலங்கை ஜனாதிபதியின் அமெரிக்காவுக்கான தனிப்பட்ட பயணம் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம், ராஜபக்சவின் நோய் தொடர்பில் மௌனத்தை கடைப்பிடித்து வருகிறது இந்தநிலையில் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
அவசர பயணமாக அமெரிக்கா சென்ற ராஜபக்ச, ஹுஸ்டனில் உள்ள அவரின் சகோதரரான டட்லி ராஜபக்சவுடன் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக ஸ்ரீலங்கன் காடியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, உயிராபத்துள்ள நோய் ஒன்றுக்காகவே ஹுஸ்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இலங்கையின் செய்தி ஊடகம் ஒன்றின் தகவல்படி, மஹிந்த ராஜபக்ச, எம் டி அன்டர்சன் புற்றுநோய் நிலையத்தில் சிகிச்சை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்தமைக்கு இந்த நோயே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுகம் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ச, கொழும்பு திரும்பி, இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பார் என்றும் ஸ்ரீலங்கன் காடியன் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக