16 ஜனவரி 2011

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா உதவி!

இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்துக்காக அமெரிக்கா, 300 ஆயிரம் டொலர்களை வழங்கவுள்ளது. இதற்கான அறிவி;த்தலை இலங்கைக்காக அமெரிக்க தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் விடுத்துள்ளார்.
இந்த உதவியின் மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களும் சேவைகளும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கின் மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய இடங்கள் உட்பட நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் வரை உயிரிழந்து, பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக