02 ஜனவரி 2011

யாழ்ப்பாணத்தில் கொலை,கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு யாழ்ப்பாண மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் நான்கு படுகொலைச் சம்பவங்களும், இரண்டு கடத்தல்களும் பதினைந்து கொள்ளைச் சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மதகுரு, பிரதிக் கல்விப் பணிப்பாளர், வாகன தரகர், சுற்றாடல் ஆர்வலர் உள்ளிட்டோர் படுகொலை செய்யபட்டுள்ளனர். ஆயுத முனையில் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக