18 ஜூலை 2010

கொடிகாமம் பகுதியில் இளம் பெண் சுட்டுக்கொலை!


நேற்று சனிக்கிழமை காலையில் கிட்டத்தட்ட 7.30 மணியளவில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இச்சம்பவம் தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அண்மையில் நடந்துள்ளது. இறந்த பெண்மணி இன்னமும் அடையாளங் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளிக்கிழமையன்று சாவகச்சேரியிலுள்ள மந்துவில் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தென்மராட்சிப் பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக