28 ஜூலை 2010

தொல்புரத்தில் சிறுமி மீது பாலியல் முறைகேடு,குற்றவாளி தேடப்படுகிறார்.


யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் பத்து வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேக நபர் ஒருவரைத் தேடி வட்டுக்கோட்டை பொலிஸார் வலை விரித்துள்ளனர். அப்பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியமையைத் தொடர்ந்தே பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

இந்த மாணவியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் இவர் இந்த மாணவியை அவ்வப்போது பாடசாலைக்கு அழைத்து செல்கின்றமை வழக்கம் என்று கூறப்படுகிறது. சம்பவ தினம் பரீட்சை ஒன்றுக்காக இந்த மாணவியை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற இவர் பாடசாலை நிறைவடைந்து மாண வி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே குற்றம் புரிய முயன்றுள்ளார் என கூறப்படுகின்றது.

இந்த மாணவியைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிச் சென்ற போது இவர் பற்றை மறைவொன்றில் வைது மாணவியைத் துன்புறுத்திக் கொண்டிருந்ததாரெனவும், பெற்றோரைக் கண்டமையுடன் தப்பியோடித் தலைமறைவாகியுள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டமையைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை இந்த நபருக்கு இரண்டு மனைவிகளும் ஏழு பிள்ளைகளும் உள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக