24 ஜூலை 2010

வணிகர் சங்க கூட்டமைப்பை உடைக்க முடியாது-வெள்ளையன்.

வணிகர் சங்க பேரவையில் குழப்பம் ஏற்படுத்தி உடைக்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், வணிகர் சங்க மாநாட்டின் மூலமாக, பேரவையின் பெரும்பான்மை பலத்தை பார்த்து வியந்த சில அரசியல் கட்சிகள், வணிகர் சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்கின்றன. இதனால், தவறு செய்பவர்களுக்கும், வணிகர் பேரவைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது போன்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள், அவர்களுக்கு உந்துசக்தியாக உள்ளன. பொய் பிரசாரம் மூலமாக, வணிகர் பேரவையை உடைத்து குழப்பம் ஏற்படுத்தலாமென்ற முயற்சி தவிடு பொடியாகி விடும்.
பொது செயலர் மோகன் நடத்திய கூரியர் நிறுவனத்தில் நடந்த மோசடியை பேரவை கண்டித்தது. அதனால், சிலருடன் சேர்ந்து கொண்டு, அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், கட்சி சார்பற்ற வணிகர் பேரவையை உடைக்க முயற்சிக்கிறார். பேரவையில் உயர்மட்டக் குழு என்ற நிர்வாக அமைப்பே கிடையாது. ஆனால், உயர்மட்டக் குழுவில் முடிவு செய்து நீக்கப்பட்டதாக தகவல் பரப்புகின்றனர். அரசும், அரசியல் கட்சிகளும் கூட்டாக செயல்பட்டாலும், வணிகர் சங்க பேரவையில் குழப்பம் ஏற்படுத்தி உடைக்க முடியாது. அனைத்து மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள், பேரவைக்கு ஆதரவாக உள்ளனர். வரும் 25ம் தேதி சென்னையில் அனைத்து வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் நடத்தி, இப்பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக