25 ஜூலை 2010

தேங்காய்க்குள் கை உருவம்,கல்முனையில் அதிசயம்!


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தேங்காய்க்குள் இருந்து ஆறு விரல்களுடன் கூடிய கை உருவம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பாலிகா வீதியில் முன்னாள் உயர் கல்வித்துறைப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் வீட்டுக்கு அருகில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மௌலவி என்பவரின் வீட்டிலேயே இந்த பேரதிசயம் இடம்பெற்றுள்ளது.
இந்த வீட்டில் வளவில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காய் ஒன்றை சமையல் தேவைக்காக வீட்டுக்கார பெண்மணி உடைத்தபோதே அதற்குள் ஆறு விரல்களுடன் கூடிய கை உருவம் ஒன்று இருக்கின்றமை கண்ணில் பட்டது. இந்த பேரதிசயத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த வீட்டுக்கு வருகை தந்து கொண்டு இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக