23 ஜூலை 2010

இலங்கை அரசுக்குள் மூன்று குழுக்கள்.


இலங்கை அரசு மூன்று குழுக்களாக உடைந்து விட்டது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தலைமையில் ஒரு குழுவும்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எம்.பி தலைமையில் இன்னொரு குழுவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் மற்றொரு குழுவும் செயற்பட்டு வருகின்றன என்று அச்செய்திகள் தெரிவிக்கின்றன.


முன்பு அமைச்சர் பஸில் ராஜபக்ஸ எம்.பி தலைமையிலான குழுவில் செயற்பட்டு வந்தவர்களில் அநேகமானவர்கள் இப்போது நாமல் ராஜபக்ஸ எம்.பியின் குழுவில் இப்போது இணைந்திருக்கின்றார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று குழுக்களுக்களுக்குள்ளும் சிக்கி இலங்கை அரசின் நடவடிக்கைகள் சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக