21 ஜூலை 2010

இராணுவத்தளபதியை நாடாளுமன்றில் முன் நிறுத்தவேண்டும்-சரத்.

நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவை அழைக்க வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமைப் பிரச்சினையொன்றைக் கிளப்பிய சரத் பொன்சேகா, ஜூலை 16 ஆம் திகதி நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தன்னை பங்குபற்றவிடாமல் செய்ததன் மூலம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்படுவதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பெனவும் கூறினார்."இராணுவத்தினர் எனக்குப் பாதுகாப்பு வழங்குவதை மாத்திரமே செய்யவேண்டும். சிறைச்சாலை அதிகாரிகள் என்னை அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரத் தயாராக இருந்தனர். ஆனால், இராணுவ அதிகாரிகள் என்னை அதில் பங்குபற்றவிடவில்லை" எனவும் சரத் பொன்சேகா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக