24 ஜூலை 2010

தமிழ் கைதிகள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்.



கொழும்பு விளக்கமறியல் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் மீது சிறைக்காவலர்களும், சிங்கள கைதிகளும் தாக்குதலை நடத்தி வருவதாக சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை சிறைக்காவலர் ஒருவர் தமிழ் கைதி மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 380 தமிழ் கைதிகளும் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல்களை நடத்தியதாகவும் தற்போதும் இந்த தாக்குதல் தொடர்வதாக சிறைக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள கைதிகள் தமிழ் கைதிகள் மீது தாக்குதலை நடத்தும் போது சிறைக்காவலர்கள் அதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிங்கள கைதிகளின் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தமிழ் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த தமிழ் கைதிகளை வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு பா.அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டியூ குணசேகர மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக