02 ஜூலை 2010

மட்டக்களப்பு குடும்பிமலை காட்டுப்பகுதியில் கிபீர் குண்டு வீச்சு!



மட்டக்களப்பில் உள்ள குடும்பிமலையை அண்டிய காட்டு பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு இராணுவத்தின் கிபிர் விமானம் குண்டுகளை வீசியது இதனால் இவற்றை அண்டிய வயல் பிரதேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் வீசிய குண்டுகளை ஒத்ததாகவே இது காணப்பட்டதாகவும் இதை அடுத்து குறித்த பிரதேசத்தை நோக்கி கூடுதலான இராணுவம் சென்றதாகவும் குறித்த பிரதேசத்தை அண்டிய மக்கள் தெரிவிக்கிறார்கள். குண்டு வீசப்பட்டதற்கான காரணங்கள் பல வகையாக பேசப்படுவதால் உண்மையை அறிய முடியாமல் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக