25 ஜூலை 2010

மாயாவின் பாடல்களுக்கு தடையாம்.


பிரித்தானியாவில் வாழும் ஈழத் தமிழ்ப் பொப்பிசைப் பாடகியான மாயாவின் வீடியோக்களும், இசைதொகுப்புக்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் அமைகின்றதால் அவரின் இசைக்கு எம்.டிவி , யு டியூப் போன்ற ஊடகங்கள் தடை விதித்துள்ளன.


பொப் இசை உலகில் முன்னணிப் பாடகர்களில் ஒருவர். எம்.ஐ.ஏ. என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் .


மாயாவின் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இதனாலேயே பலமுறை இவரின் பாடல்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. அண்மையில் இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்பு ஒன்றும் இது போன்ற சர்ச்சைக்குள்ளாகி பெரும் தோல்வியை சந்தித்தது.

அவருடைய தீவிர ஆசைகளும், வாழ்க்கையும், பொப் இசையும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதவை என்றும் அதனால் அவ்ற்றின் தாக்கம் பாடல்களில் இருக்கத்தான் செய்யும் என்றும் மாயா கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக