11 ஜூலை 2010

வேலணையில் சிங்கள கயவனால் தமிழ் தாதி படுகொலை!



வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல உத்தியோகத்தராக பணியாற்றிய இளம்பெண் ஒருவர் அங்கு கடமையாற்றிய சிங்கள வைத்தியரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதடி தெற்கைச்சேர்ந்த தர்சிகா சரவணன் என்ற 27வயதுடைய இளம்பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். வேலணை மத்திய மருத்தகத்தில் கடமையாற்றிவந்த இந்த இளம் பெண் அங்கு பணியாற்றி வந்த சிங்கள வைத்தியரான ரத்னபுரியைச்சேர்ந்த பிரியந்த செனிவரத்னா என்ற வைத்தியரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் நேற்று காலை இவரது சடலம் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவரது மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை நடத்திய சட்டவைத்தியஅதிகாரி இரத்தினசிங்கம் இம்மரணம் தற்கொலைக்கான சான்றுகள் காணப்படவில்லை என தெரிவித்துள்ளார். மரணவிசாரணைகளை நடத்திய வேலணை மாவட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்ததுடன் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதேவேளை இக்கொலையில் சந்தேக நபராக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வைத்தியர் பிரியந்த செனிவரத்னா தற்போது சங்கானை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் வேலணைப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக