20 ஜூலை 2010

சிறுவனை கொலை செய்த கள்ளக்காதலி!



தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த கள்ளக் காதலி, கள்ளக்காதலனின் 4 வயது மகனை கடத்திச் சென்று கொலை செய்து சூட்கேசில் அடைத்து நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் போட்டது தெரியவந்துள்ளது.
.
இதுதொடர்பாக கள்ளக்காதலியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவரது மனைவி அனந்த லட்சுமி. இவர்களுக்கு நிவேதிதா (வயது 6) மற்றும் ஆதித்யா (வயது 4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நான்கு வயது சிறுவனான ஆதித்யாவை தந்தை ஜெயக்குமாரின் காதலி பூவரசி கடந்த 17ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் மயமானார். அதற்கு மறுநாள் ஜெயக்குமாரின் காதலி பூவரசி தான் அழைத்துச் செல்லவதாக கூறப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் அருகில் உள்ள பிளாட்பிராத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டனர்.பின்னர் பூவரசி ஜெயக்குமாருக்கு தொடர்பு கொண்டு தான் மயங்கி விட்டதாகவும், தன்னுடன் வந்த ஆதித்யா காணவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் கடந்த 18ம் தேதி அடையாளம் தெரியாத 4 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் சூட்கேஸில் பிணம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சூட்கேஸில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் உடல் ஆதித்யாவாக இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுவனின் உடலை அடையாளம் காண ஆதித்யாவின் தாயார் அனந்த லட்சுமியை போலீசார் நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். உடலை பார்த்த அனந்த லட்சுமி கொலை செய்யப்பட்ட உடல் தனது மகன் தான் என உறுதி செய்தார். இந்நிலையில், ஜெயக்குமாரின் கள்ளக்காதலி பூவரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில் கூறியதாவது: நான் வேலூரைச் சேர்ந்தவர். எம்எஸ்சி வரை படித்திருக்கிறேன். 2006ம் ஆண்டு வீட்டை விட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்போது ஜெய்குமாருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல முறை நெருக்கமாக இருந்தோம். இதனால் நான் கருவுற்றேன். கருவை கலைக்கும் படி கூறினார். நானும் அதன்படி கலைத்தேன். என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கேட்டேன். அதனை ஜெயக்குமார் மறுத்துவிட்டார். இருப்பினும், ஜெயக்குமார் மீது இருந்த காதலால் அடிக்கடி அவரை பார்க்க வீடு மற்றும் அலுவலகத்திற்கு சென்று வந்தேன். அதே போல் கடந்த 17ம் தேதி ஜெயக்குமாரின் அலுவலகத்திற்கு சென்ற போது அவருடன் மகன் ஆதித்யா இருந்தார். அப்போது ஆதித்யாவை சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி சிறுவனை அழைத்துச் சென்றேன்.வேப்பேரியில் தங்கியிருந்த எனது விடுதிக்கு ஆதித்யாவை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சிறுவனை சூட்கேஸில் வைத்து ஆட்டோ மூலம் கோயம்பேடு எடுத்துச் சென்றேன்.பின்னர் அங்கிருந்து பஸ் ஏறி பாண்டிச்சேரிக்கு சென்றேன். அங்கிருந்து நாகப்பட்டினம் பஸ்ஏறி நாகப்பட்டினம் செல்லும் போது சிதம்பரம் அருகே சென்றவுடன் பயமடைந்து பஸ்சில் இருந்து கீழே இறங்கி விட்டேன் என போலீசாரிடம் பூவரசி கூறியிருக்கிறார். பஸ் நாகப்பட்டினம் சென்றடைந்போது பஸ்சில் அனாதையாக சூட்கேஸ் இருந்ததால் அதனை எடுத்து பஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். பின்னர் பஸ் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் ஈக்கள் மொய்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக