07 ஜூலை 2010

ஐ.நா.வுக்கு எதிராக கொழும்பில் நடைபெறும் எதிர்ப்புக்கு அமெரிக்கா கண்டனம்.



ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் அமைச்சர் விமல் வீரவன்ஸ குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக்கு, ஐக்கிய அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர், மார்க் டோனரை மேற்கோள்காட்டி, ஏ எப் பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களின் உரிமையை தாம் மதிக்கின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கு எதிராக அதன் நிபுணர்கள் குழுவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு, மனித உரிமைகள் தொடர்பில் அவருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டே அமைக்கப்பட்டுள்ளது.
எனவே அமெரிக்கா அதற்கு பூரண அதரவை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக