28 ஜூலை 2010

பிரசன்ன டி சில்வா பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படுவார்.



பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார்.
லண்டன் பிரண்ட் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தொழில்கட்சியின் மக்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பிரண் ரவுண் ஹோலில் நடைபெற்ற தொழில்கட்சியின் மக்கள் பொதுக்கூட்டத்தில் மக்களின் கேள்வி நேரத்தின் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முக்கியமானதாக இரண்டு கேள்விகள் அமைந்திருந்தன. அதில் முதலாவதாக லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய சிவந்தனின் மனிதநேயப் பயணம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டதோடு அவருக்கான ஆதரவையும் ஒத்துழைப்புக்களை தொழில்கட்சி வழங்கவேண்டும் எனவும், பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு புதிதாக இலங்கை அரசினால் புதிய அதிகாரியாக முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான 55 ஆவது டிவிசன் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா அனுப்பப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன என கேட்கப்பட்ட போது பதிலளிக்கையிலேயே அவர் கீழ்கண்டவாறு தெரிவித்தார்.
சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணம் மிகச்சிறந்ததொன்றானதோடு பாராட்டுக்கு உரியது. இவ்வாறான செயற்பாடு மிகச்சிறந்த விளிப்புணர்வை ஏற்படுத்தும். அத்தோடு தொழில்கட்சியின் சகோதரக்கட்சிகள் உலகெங்கும் பரவியுள்ளது. அதனால் சிவந்தன் மேற்கொள்ளும் நடைபயண வளிகளில் எமது சகோதர கட்சிகளினூடாகவும் அதன் உறுப்பினர்களையும், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அந்தந்த பிரதேசங்களில் சிவந்தனை சந்தித்து வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்த முடியும் எனவும் கூறினார். டேவிட் மிலிபானின் பிரதிநிதியாக அக்கூட்டத்திற்கு வருகைதந்திருந்த டான் அவர்கள் இது தொடர்பாக இன்றே உடனடியாக டேவிற் மிலிபான்ட் இன் கவனத்திற்கு கொண்டுசென்று ஆவன செய்வதாக தெரிவித்தார்.
அடுத்து மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வாவின் பிரித்தானிய வருகை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் நீங்கள் கூறுவது போன்ற செய்தியை நான் அறியவில்லை. இது மிகவும் வியப்பாக உள்ளது. போர்க்குற்றம் புரிந்த ஒரு இராணுவ படைப்பிரிவின் தளபதி தூதரக அதிகாரியாக பிரித்தானியா வருவது உண்மையானால் அவர் நிச்சயமாக கைதுசெய்யப்படுவார். ஆனால் அதற்கான ஆதாரங்களை நீங்கள் எமக்கு தரவேண்டும்.
அதாவது அவரின் முழு விபரம், அவர் பணிபுரிந்த படைப்பிரிவின் பெயர், அவர் பதவி வகித்த காலம், அவரின் படைநடவடிக்கையின் போது மக்கள் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் என்பவற்றை விரைவில் தந்துதவினால் அவர் சட்டத்திடம் இருந்து தப்பிக்காமல் நிச்சயம் கைது செய்யப்படுவார்.
உதாரணமாக கடந்த வருடம் இடம்பெற்ற வன்னிப்பேரவலத்தின் போது இவரின் பொறுப்பில் இருந்த படையினரின் தாகுதல்களில் மக்கள் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் தாக்கப்பட்டது போன்ற ஆதாரங்களை பத்திரிகைச்செய்திகளில் இருந்தோ, அல்லது அங்கு பணிபுரிந்த உதவி நிறுவனங்களின் மூலமோ உறுதிப்படுத்தும் பட்சத்தில் அது கண்டிப்பாக அவரை கைது செய்வதை உறுதிப்படுத்தும்.
எனவே இத்தரவுகளையும், ஆதாரங்களையும் உடனடியாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் திரட்டித்தரும் பட்சத்தில் அதனை பாராளுமன்றம் வரை எடுத்துச்செல்வது மட்டுமன்றி பிரித்தானியாவுக்குள் அவர் கால் பதிக்கும் போதே கைது செய்யவும் முடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக