20 ஜூலை 2010

தர்சிகாவின் சடலத்தை தோண்டி எடுத்து கொழும்புக்கு அனுப்ப உத்தரவு.


வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றிய குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


ஊர்காவல்துறை நீதிவான் ஆர் வசந்தசேனன் அச்சடலத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி தோண்டியெடுக்க வேண்டும் என்றும் மரண பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


மகளின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என்று தெரிவித்து அவரின் தாயார் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர் மூலம் தாக்கல் செதிருந்தார்.

இச்சந்தேகத்தை நிவர்த்தி செய்ய மகளின் மரண பரிசோதனையை நீதிமன்றம் மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று அம்மனுவில் கோரி இருந்தார். இந்நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக