29 ஜூலை 2010

செந்தமிழன் சீமானை தமிழ் உணர்வாளர்கள் சந்தித்தனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானை, சசிகலாவின் கணவர் நடராஜன், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.இன்று காலை இவர்கள் இருவர் மற்றும் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆகியோர் வேலூர் சிறைக்குச் சென்றனர். அங்கு சீமானை சந்தித்து முக்கால் மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்து நடராஜன் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் அரசு தன்னை வேண்டும் என்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளதாக சீமான் கூறியதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக