31 ஜூலை 2010

மகேஸ்வரனின் வெற்றி எம்மை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



பிரித்தானியா ஊடகங்களின் பொய்யான பரப்புரைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் ஈட்டிய வெற்றி புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளதாக சிறிலங்காவில் உள்ள ஜனநாய மக்கள் முன்னனியின் தலைவர் திரு மனோ கணேசன் திரு பரமேஸ்வரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றிபெற்றுள்ளது எம்மை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் சமூகத்தின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முயன்றவர்களுக்கு இது பலத்த ஏமாற்றம். பிரித்தானியாவின் ஊடகங்களுக்கு இந்த பொய்யான தகவல்களை வழங்கியவர்கள் யார் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
பிரித்தானியா ஊடகங்களின் பொய்யான தகவல்களின் பின்னனியில் சிறீலங்காவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்புகள் உண்டா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
எது எவ்வாறானாலும், நீங்கள் வரலாற்றை உருவாக்கி இருக்கிறீர்கள், அது நீண்டகாலம் பயணிக்கும். உங்களுக்கு எமது கட்சியின் ஆதரவுகள் எப்போதும் உண்டு என அவர் பரமேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள தனிப்பட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக