31 ஜூலை 2010

மீண்டும் படைத் தடுப்பு முகாமில் போராளிகள்.



மன்னார் - மருதமடு புனர்வாழ்வு முகாமில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் சுமார் 100 பேர் விசாரணைகளுக்காக சிறிலங்கா இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளிடம் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டிருந்தன. 17 கைத்தொலைபேசிகள், 14 கைத்தொலைபேசி இணைப்பு அட்டைகள், 30 கைத்தொலைபேசி மின்கலங்கள், மின்கலன்களுக்கு மின்ஏற்றும் 21 கருவிகள் என்பன இந்தப் புனர்வாழ்வு முகாமிலிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணகள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத் தலைமையக ஊடகப் பிரிவைச் சேர்ந்த கேணல் துமிந்த கமகே தெரிவித்தார். புனர்வாழ்வு முகாமுக்குள் தடைசெய்யப்பட்டிருந்த இந்தப் பொருட்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, அவற்றுடன் தொடர்புடையயவர்கள் யார், இந்தத் தொலைபேசிகளில் இருந்து யார் யாருக்கு அழைப்புகள் எடுக்கப்பட்டிருந்தன என்பன குறித்த விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம தொடர்பாக புனர்வாழ்வு முகாமிலிருந்த 100 முன்னாள் போராளிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர்கள் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக