
சிங்களத் தோழர்கள், விராஜ் மெண்டிஸ், ஜுட் லால் பெர்னாண்டோ ஆகியோர் தமது பெருமுயற்சியால் 2009 இறுதியில் டப்ளினில் மக்கள்தீர்ப்பாயத்தினை நடத்தி சர்வதேசத்தினை அமெரிக்க-இங்கிலாந்து -ஐரோப்பிய ஒன்றீயத்தினை அம்பலப்படுத்தினார்கள்.
-திருமுருகன் காந்தி அவர்கள் தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட செய்தியில் இருந்து.
தமிழீழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை விசாரிக்க நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal)கடந்த சனவரி ,2010 அயர்லாந்திலுள்ள டப்ளினில் நடத்திய விசாரணையின் இரண்டாவது அமர்வு கடந்த டிசம்பர்-7,2013 அன்று ஜெர்மனியில் தொடங்கியது.
வருகின்றன டிச-10 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் தமிழீழ இனப்படுகொலையில் பங்கேற்ற இந்தியா,அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பங்களிப்பும் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..
அதோடு, தமிழீழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையா என்பது சாட்சிகளையும், தகுந்த ஆதாரங்களையும் கொண்டு கடந்த 2 நாட்களாக இந்த தீர்ப்பாயம் விசாரணை நடத்திவருகின்றது.
விசாரணையின் கடைசி நாளான இன்று , தமிழக நேரப்படி விசாரணை சரியாக பகல் 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை நடைபெறும். இந்த விசாரணையை இணையத்தில் நேரலையில் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
(http://www.pptsrilanka.org/livestreaming/index.html)இன்றைய விசாரணையில் தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் மே 17 இயக்கத்தை சார்ந்த தோழர்.திருமுருகன் காந்தி, தோழர்.உமர் உள்ளிட்டோரின் சாட்சியங்களும், ஆதாரங்களும் விசாரணைக்கு வரவிருக்கின்றன.
இன்றுடன் முடிவடையும் விசாரணைக்கு பின் நாளை (10/12/13) இதனைப்பற்றிய தீர்ப்பு வழங்கப்படும்.
இனப்படுகொலைகளை பற்றிய விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வரும் இந்த Permanent Peoples tribunal -ல் ஒய்வு பெற்ற அய்.நா அதிகாரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக