09 டிசம்பர் 2013

தமிழீழப்படுகொலையில் இந்தியா மற்றும் ஐ.நாவின் பங்கு!

தமிழீழப்படுகொலையில் இந்தியா மற்றும் ஐ.நாவின் பங்கு பற்றிய எங்களது மூன்றாண்டு ஆய்வினை ஆதாரங்களோடு சமர்பித்துள்ளோம். எங்களது வாதங்கள் அடுத்த அமர்வில் தொடரும்.இனப்படுகொலைக்கான மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த சர்வதேச விசாரணை முயற்சியை தொடர்ந்து செய்து வரும் சிங்களத் தோழர்கள் விராஜ் மெண்டிஸ், ஜூட் லால் பெர்னாண்டோவிற்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிப்போம். அயராது உழைக்கும் அவர்களது பங்களிப்பு நிச்சயம் ஈழத்தில் நிகழ்ந்த அநீதிகளை சர்வதேச அரங்கில் வெளிக்கொணரும்.
சிங்களத் தோழர்கள், விராஜ் மெண்டிஸ், ஜுட் லால் பெர்னாண்டோ ஆகியோர் தமது பெருமுயற்சியால் 2009 இறுதியில் டப்ளினில் மக்கள்தீர்ப்பாயத்தினை நடத்தி சர்வதேசத்தினை அமெரிக்க-இங்கிலாந்து -ஐரோப்பிய ஒன்றீயத்தினை அம்பலப்படுத்தினார்கள்.
-திருமுருகன் காந்தி அவர்கள் தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட செய்தியில் இருந்து.
தமிழீழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை விசாரிக்க நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal)கடந்த சனவரி ,2010 அயர்லாந்திலுள்ள டப்ளினில் நடத்திய விசாரணையின் இரண்டாவது அமர்வு கடந்த டிசம்பர்-7,2013 அன்று ஜெர்மனியில் தொடங்கியது.
வருகின்றன டிச-10 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் தமிழீழ இனப்படுகொலையில் பங்கேற்ற இந்தியா,அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பங்களிப்பும் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..
அதோடு, தமிழீழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையா என்பது சாட்சிகளையும், தகுந்த ஆதாரங்களையும் கொண்டு கடந்த 2 நாட்களாக இந்த தீர்ப்பாயம் விசாரணை நடத்திவருகின்றது.
விசாரணையின் கடைசி நாளான இன்று , தமிழக நேரப்படி விசாரணை சரியாக பகல் 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30 வரை நடைபெறும். இந்த விசாரணையை இணையத்தில் நேரலையில் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
(http://www.pptsrilanka.org/livestreaming/index.html)இன்றைய விசாரணையில் தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் மே 17 இயக்கத்தை சார்ந்த தோழர்.திருமுருகன் காந்தி, தோழர்.உமர் உள்ளிட்டோரின் சாட்சியங்களும், ஆதாரங்களும் விசாரணைக்கு வரவிருக்கின்றன.
இன்றுடன் முடிவடையும் விசாரணைக்கு பின் நாளை (10/12/13) இதனைப்பற்றிய தீர்ப்பு வழங்கப்படும்.
இனப்படுகொலைகளை பற்றிய விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வரும் இந்த Permanent Peoples tribunal -ல் ஒய்வு பெற்ற அய்.நா அதிகாரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக