13 டிசம்பர் 2013

சுயாட்சியை பெற்றுக்கொள்ள உழைக்க வேண்டும்-சித்தார்த்தன்

தமிழ் மக்களும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் மூன்றாவது அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றபோது அங்கு குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.“
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாகாண சபைத் தேர்தலுக்கு மக்கள் வாக்களித்த போது பெரும் எதிர்பார்ப்போடு வாக்களித்தார்கள். இருந்தாலும் அந்த எதிர்பார்ப்புக்கள் எல்லாம் முழுமையாக நிறைவேற்ற முடியாது என்பதை தேர்தலில் போட்டியிட்ட போதே நாங்கள் தெளிவாக கூறியிருந்தோம்.
ஏனென்றால், மாகாண சபை முழுமையான அதிகாரம் பெற்ற சபையாக இல்லாது மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதியிலே கூடுதலாக தங்கியிருக்கின்ற சபையாகவே இருக்கின்றது.எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இலங்கையின் செலவீனத்தின் அரை வீதத்திற்கும் குறைவானதாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து முதலமைச்சர் கூறியது போல் மக்களுடைய நாளாந்த பிரச்சினைகள் அவர்களுடைய மறுவாழ்வு தொடர்பில் எவ்வளவு தூரம் அக்கறை கொள்ளமுடியும் என்பதை அறியமுடிகின்றது.ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலே பெரும்பாலான நிதி மீண்டுவரும் செலவீனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அபிவிருத்தி வேலைகள் குறைவாகவே இருக்கும் இது எதிர்பார்க்கப்பட்ட விடயம்.கிடைத்த பணத்தில் எப்படி புத்திசாலித்தனம் பக்குவமாக இந்த வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது என்பது தொடர்பில் முதலமைச்சர் கூறியுள்ளார். இதற்கு முதலமைச்சருக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.குறிப்பாக சட்ட ஒழுங்கு 13 ஆவது திருத்தத்தில் ஒரு பகுதி முதலமைச்சரின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பு செயலர் கூறியிருந்தார் சட்டம் ஒழுங்கு முதலமைச்சருக்கு கீழ் உள்ள விடயம். ஆனால் பொலிஸ் அதிகாரம் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில் இதன் மூலம் எவ்வாறு சட்ட ஒழுங்கை முதலமைச்சர் பார்க்கமுடியும் என்ற கேள்வியுள்ளது.சட்ட ஒழுங்கை மாகாண சபையோ, பொலிஸாரோ தனியாக செய்யவேண்டும் என்று இல்லை. மக்கள் சரியான விழிப்புணர்வு பெற்று எமது சமூகம், கிராமத்தை முன்னோக்க வேண்டும். வடக்கின் பல வீதிகள் சுமார் 50 வருடங்களாக புனரமை க்கப்படாத நிலையில் உள்ளன. பல வீதிக ளைப் பார்த்தால் சிறு மழை பெய்தவுடனே வெள்ளம் ஓடும் நிலை காணப்படுகிறது.இதனால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய வீதிகள் முன்னுரிமை அடிப்படையில் திருத்தப்படவேண்டும்.புனர்வாழ்வு முதலமைச்சர் கீழ் இருந்தாலும் பல விடயங்கள் மத்திய அரசு செய்துவருகிறது. வடமாகாண வரவு செலவு நிதி ஒதுக்கீ ட்டை பார்க்கின்றபோது நாம் எதையும் செய்யமுடியாது. மக்களுக்கு நியாயமான எதுவும் செய்யும்போது வேறுவிதமாக அணுகுமுறையைக் கையாள வேண்டும்.பிரத்தியேகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையாக இருக்கிறது. இதற்கு இரண்டு விடயங்கள் உள்ளது. சட்டம் ஒழுங்கு, விதி, புனர்வாழ்வு போன்ற வற்றிற்கு மிகமுக்கியமாக அரசியல் தீர்வுக் காக வாக்களித்தார்கள்.தமிழ் மக்கள் தாங்களே தங்களுடைய அலுவல்களை பார்க்கவேண்டிய விதத்திலே ஒரு சுயாட்சியை நான் காணவில்லை ஒன்று பட்ட இலங்கைக்குள் நாங்களே எங்களுடைய அலுவல்களை பார் க்கக்கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ளவேண்டும்.இதனை மாகாண சபை மாத்திரம் செய்கின்ற வேலை அல்ல மாகாண சபை ஓர் ஆரம்பப் புள்ளியாக இதனைத்தான் தேர்தலில் போட்டியிடும் போது எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்கள் ஆரம்ப புள்ளியை தந்துள்ளார்கள்.தொடர்ந்தும் எங்களுடைய இலக்கை அடைவதற்கு தமிழ் மக்கள் என்ன கார ணத்திற்காக இவ்வளவு அவலங்களையும் சந்தித்தார்களோ அந்த இலக்கு இலட்சிய த்தை வென்றோருக்கு உழைக்க வேண்டும்.முதலமைச்சர் தலைமையில் நாங்கள் தொடர்ந்து எமது மக்களுக்கு அரசியல் தீர் வையும் அந்த அரசியல் தீர்வின் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வ தற்காக செய்யும் தீர்வு உருவாக்க முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக