07 டிசம்பர் 2013

சிறீலங்காவை அலறவைக்கும் பிரித்தானியா!

சிறிலங்காவின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நேச நாடுகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
மார்ச் மாத ஜெனீவா அமர்வில் சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச ஆதரவினைத் திரட்டும் வகையில் பொதுநலவாயம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தனது நேச நாடுகளுடன் பிரித்தானியா கலந்துரையாடவுள்ளதாக பிரித்தானியாவின் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
மார்ச் மாதத்துக்கு முன்னராக சிறிலங்கா அரசு, யுத்தம் குற்றம் தொடர்பில் வெளிப்படையான சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவை ஊடாக சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படும். இந்த விடயத்தை எமது பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் முன்னேற்றத்தைக் காண விரும்புகின்றது என பிரதமர் டேவிட் கமரூன் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக