24 டிசம்பர் 2013

நெடுந்தீவு முகிலனின் பாற்காரன் குறும்படம்!

Palkaran 4நெடுந்தீவு முகிலனின் 6வது ஈழத்துக்குறும்படமான பாற்காரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் ராஜா திரயரங்கில் வெகு விமர்சையாக வெளிவந்தது. சர்வதேச தரத்திற்கூடான திரை நுணுக்கங்களோடும், தெனிந்திய சினிமாக்களுக்கு சவாலாகவும் இப்படம் வெளிவந்துள்ளது,
இக்குறும்பட வெளியீட்டு விழாவினை திரைஅரங்கிலேயே படக்குழுவினர் செய்திருந்தனர், இதில் ஆரம்ப நிகழ்வான மங்கள விளக்கேற்றலினை பால்விளக்கு எனும் பெயரில் தனியாக வடிவமைக்கப்பட்ட பால் கொள்கலனில் ஏற்றியது பார்வையாளர்களை மேலும் ஆச்சரியத்துக்கு உட்படுத்தியது
வரவேற்புரையை எஸ். உமாசுதன், அறிமுக உரையை கே. பிரபாகரன், வெளியீட்டுரையை ச. லலேசன் வழங்கினர்.
பண்டிதர் பொன்.சுகந்தன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமவிருந்தினராக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும், சிறப்பு விருந்தினராக சரோஜா சிவச்சந்திரனும் கௌரவ விருந்தினராக சி. ராஜ்குமாரும் பங்குபற்றினார்,
இந்நிகழ்வின் இறுதியில் அனைவரும் ஆவலாக காத்திருந்த பாற்காரன் படம் திரையிடப்பட்டது, மிகவும் துல்லியமான ஒளி ஒலியுடனும், அற்புதமான படப்பிடிப்பு நுணுக்கங்களுடனும், அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் அமைந்திருந்தது,
400 க்கும் அதிகமான மக்கள் வருகைதந்து ராஜா திரையரங்கத்தை நிறைத்ததுடன், திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்களை சொல்லி அவர்களை மேலும் ஊக்குவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக