30 டிசம்பர் 2013

அறிக்கை சமர்ப்பிக்கிறார் நவிபிள்ளை!

மார்ச்மாதம் 3ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாகும் நிலையில் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை அதன் ஆணையாளரான நவநீதம் பிள்ளை மார்ச் 26 ஆம் திகதி சமர்பிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்போது இந்த அறிக்கை குறித்த சிறிலங்கா அரசின் கருத்துகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த மனித உரிமைப் பேரவையில் நவநீதன் பிள்ளையினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான அறிக்கைக்கு அமைய அந்த நாடு நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகங்கொடுக்க நேரிடும். அதற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துக்கு முன்னரான காலப் பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக