04 டிசம்பர் 2013

பொறுமைக்கும் எல்லையுண்டு-அமெரிக்கா

பொறுமைக்கும் எல்லையுண்டு அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கைபொறுமைக்கும் எல்லையுண்டு என அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்தால் சர்வதேச சமூகம் பொறுமையை இழக்க நேரிடும் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா டிசாய் பிஷ்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சர்வதேச சமூகம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலளார் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக