16 டிசம்பர் 2013

கொடிகாமத்தில் பொலிசாருடன் முறுகல்!

மணல் ஏற்றிச்சென்ற அரச ஆதரவு கட்சியினர்க்கும் பொலிசாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்வபாக தெரிய வருவதாவது;
கொடிகாமம் டி பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனத்தில் நேற்று சனிக்கிழமை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லப்பட்டதை அவதானித்த பொலிஸார் அந்த வாகனத்தினை கைப்பற்றுவதற்காக துரத்திச் சென்றுள்ளனர்.
அவ்வேளை அங்கு வந்த அரச ஆதரவு கட்சியைச் சேர்ந்தோர் வீதிக்கு குறுக்காக கட்டைகளைப் போட்டு பொலிஸ் வாகனத்தை மறித்து அந்த வாகனத்தை செல்லவிடாமல் தடுத்தனர்.
பொலிஸ் வாகனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொலிஸார் இருந்தமையினால் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸாரும் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அதற்குள் குறித்த டிப்பர் வாகனம் மணலை கொட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. வீதியை மறித்தவர்களும் தப்பிச்சென்றுவிட்டனர்.
இந்நிலையில், மேற்படி பிரதேசத்தில் வேறு ஒரு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸார் இருவர்இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளனர்.
அவ்வேளையில் அங்கு குழுமியிருந்த அரச ஆதரவுக் குழுவொன்று, நீங்கள் தானே மணல் அள்ளுவதைத் தடுக்க நேற்று வந்தனீர்கள் என கேட்டுக்கொண்டே; பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளாது அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு தப்பிச்சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக