15 டிசம்பர் 2013

சிங்களத்தின் அடாவடியை தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்கள் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தில் மலையாளபுரம் என்னும் இடத்தில் பலவந்தமாக குடியேறிய சிங்ளக்குடும்பங்களின் அமைவிடம் அமைந்துள்ள இடத்தின் பாதையால் செல்லும் பெண்களை சேட்டைக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதாக அங்கிருக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றன
இப்பகுதியினுடாக சென்றுகொண்டிருந்த பெண்களை சேட்டைக்குள் இழுத்ததனால் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள் தங்களது சகோதரிகளுடன் சேட்டைவிட்டவர்களுடன் சண்டையிட்டதன் காரணமாக இங்கு வந்த பொலீசார் தமிழ்இளைஞர்களை மாத்திரம் கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்.
இதன்பின்னர் அவ்விடத்திற்கு வந்த இலங்கை இராணுவத்தினரும், பொலிசாரும் அங்கு உள்ள தமிழ் பெண்களையும், இளைஞர்களையும் தடிகள் கொண்டு தாக்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அங்கு சண்டையிட்ட இளைஞர்களில் தமிழ் இனைஞர்களை மாத்திரம் கைது செய்துள்ளனர். தற்போதும் கூட இராணுவத்திற்கு பெண்களைச் சேர்த்துக்கொள்வதில் அரசாங்கம் குறியாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக