26 டிசம்பர் 2013

புத்தர் சிலை உடைப்பு!

இன்று அதிகாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிள்ளையாரடி பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று உடைக்கபப்ட்டுள்ளது.
100 விழுக்காடு தமிழர்கள் வாழும் இந்த பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் அடாத்தாக ராணுவப் பாதுகாப்புடன் குறித்த புத்தர் சிலை பேரினவாத பிக்குகளால் நிறுவப்பட்டது. இதன் போது தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையிலிருந்து அது வெளியே எடுத்து வீசப்பட்டதில் சிலை பல பாகங்களாக நொருங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு சம்பவ இடத்தில் சேதமாக்கப்பட்ட சிலையின் பாகங்களை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் பௌத்த மக்கள் எவரும் இல்லாத பட்சத்தில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில்அங்கு முகாமிட்டிருந்த படையினரும் பொலிஸாரும் குறித்த புத்தர் சிலையை தனியார் காணியொன்றில் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மீட்கப்பட்ட புத்தர் சிலையின் பாகங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் சம்பவம் குறித்து புலனாய்வுத் துறையினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மட்டகளப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக