14 டிசம்பர் 2013

ஐரோப்பிய பாராளுமன்றின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது!

ஐரோப்பிய பாராளுமன்றின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா
அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், ஐரோப்பிய பாராளுமன்றின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறான பரிந்துரைகள் எப்போது அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதனை அரசாங்கமே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஏனைய தரப்பினரின் தேவைகளுக்காக ஆணைக்குழு நிறுவப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக