17 ஜூலை 2010

புதுச்செட்டி தெரு வீடொன்றில் மலையகப் பெண் மர்ம மரணம்!


கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த மலையகப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவமொன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீடொன்றில் இடம் பெற்றுள்ளது. மரணமானவர் பதுளை மாவட்டம் நமுனுகல எல்ல கலுகல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 40 வயதான வெள்ளைச்சாமி சீதா எலன்ராணி என்பவராவார். இவர் கழுத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக வீட்டுரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெண்ணின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வேலைக்கு அமர்த்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக