11 மார்ச் 2021

என் தங்கச்சி காளியம்மாளை நானே இழுத்து வந்தேன்-சீமான்!

தன்னுடைய கட்சி வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்து, சீட் தருவது என்பது குறித்து சீமான் தன்னுடைய சீக்ரெட்டை உடைத்துள்ளார். இந்த முறையும் அதிமுக - திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.. ஆனால், நாங்கள்தான் மாற்று என்று கமல் ஒரு பக்கம், சீமான் பக்கம், இதற்கு நடுவில் டிடிவி தினகரன் மறுபக்கம் என களமிறங்கி உள்ளனர். கமலும், தினகரனும், கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், சீமான் வழக்கம்போலவே கெத்தாக சிங்கிள் சிங்கிமாக போட்டியிடுகிறார். அதனால் மிகுந்த எதிர்பார்ப்பையும் இந்த முறை தேர்தலில் ஏற்படுத்தி உள்ளார்.இந்நிலையில், தனியார் சேனல் ஒன்றில், சீமானிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.. அதில், "எங்கள் கட்சியின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களே அடுத்த முறை தேர்தலிலும் போட்டியிடுவார்கள் என்று சொன்னீர்களே.. ஆனால், இந்த முறை 170-க்கும் மேற்பட்ட புதியோருக்கு வாய்ப்பு தந்துள்ளீர்களே? அதுஏன் சாத்தியமில்லாமல் போய்விட்டது? ஒருவேளை உங்கள் கட்சியில் இருந்து நிறைய பேர் வெளியேறி விட்டார்களா? என்ன சிக்கல்?" என்று கேட்கப்பட்டது.அதற்கு சீமான் அளித்த பதில்தான் இது: "இல்லையே.. எல்லாரும் இருக்காங்களே.. அவங்களே விட்டுக் கொடுத்த வேட்பாளர்கள்தான் இவர்கள் எல்லாம்.. யாரும் வெளியேறவில்லை.. கொரோனா காலத்திலேயே ஒன்றரை லட்சம் பேர் கட்சியில் சேர்ந்திருக்காங்க... அதுமட்டுமல்ல, காளியம்மாள் புதுசா வந்த தங்கச்சி.. நான்தான் அவளை கட்டாயப்படுத்தி இழுத்துட்டு வந்தேன்...அவள் ஒரு அமைப்பை வெச்சிக்கிட்டு மீனவர்களுக்காக போராடிட்டு இருந்தவள்.. ஒரு போராட்டக் களத்தில் சந்திக்கும்போது, அவள் பேச்சை கவனித்தேன்.. "நீ எங்கே இதை எல்லாம் பேசணும்னு நினைக்கிறே?"ன்னு நான் அவள்கிட்ட கேட்டேன், .. உடனே அவள் சட்டசபை, பாராளுமன்றத்தில் பேசணும்னு சொன்னாள்.. உடனே நான், சரி வா, அண்ணன்கூட வா-ன்னு நான்தான் அவளை கூட்டிட்டு வந்தேன்.. அப்போ அந்த இடத்தில் அவளைதானே நான் நிப்பாட்டணும்..என் தங்கச்சி சிவசங்கரி இருக்கிறாள்.. எங்க ஐடி தொழில் நுட்ப பிரிவில் இருக்கிறாள்.. அவளையும் அப்படித்தான்.. தேடி தேடிதான் கட்சிக்கு அழைத்து வந்தேன்.. என் தம்பி வெற்றிக்குமரனில் இருந்து எல்லாரும் அதே வேட்பாளர்கள்தானே இந்த முறையும் நிக்கிறாங்க.. நின்னவங்களே இப்பவும் நிக்கறோம்.. புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பு தரணும்தானே? தகுதியானவர்களை அடையாளப்படுத்தி மக்கள் முன்னாடி நிறுத்தணும்னு நினைக்கிறேன்.. அதுதான் என் வளர்ச்சிக்கும் அது சரியாக இருக்கும்.." என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக