31 ஜனவரி 2011

மகிந்தவை நோய் தாக்கியுள்ளமை ஊர்ஜிதம்!

மஹிந்த ராஜபக்ஷ கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சையை மஹரகமை புற்றுநோய் மருத்துவமனையின் வைத்தியர் கனிஷ்க என்பவர் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன் காரணமாகவே தனது நோய்க்கு மேலதிக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோக்கிலேயே அவர் அண்மையில் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் உறுதிப்படுத்துகின்றார்.
ஆயினும் அவரது சிகிச்சையின் பின்னும் அடிக்கடி ஜனாதிபதியின் முகத்தில் ஒரு வீக்கம் ஏற்படுவதாகவும், அவ்வாறான நிலையில் அவரைக் காண்பவர்கள் அவர் குடித்துவிட்டிருப்பதாக கருதிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதும் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடிக்கடி விசேட மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் தனது நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக