14 ஜனவரி 2011

சரத்தின் கைதினால்தான் நாட்டில் இயற்கை அழிவுகளாம்!

சரத் பொன்சேகாவை விடுதலை செய்தால் மாத்திரமே வெள்ளம், நோய்கள் மற்றும் வைரஸ் போன்றன நாட்டில் பரவுவது முடிவுக்கு வரும் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள இந்நிலையானது இறைவனின் சாபமாகும். சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் வரை இந்நிலை தொடரும் என இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாளை விடுதலை செய்யப்படுவாரானால் அனைத்து மக்களும் சமாதானமாக வாழ முடியும் என நான் நினைக்கின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக